8/4/24
நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்
மஞ்சள் பூசியமுகமடி
6/4/24
இரண்டு இதயங்கள்
5/4/24
பழகிப் போன பாதை
4/4/24
மனைவியை நேசிக்க தெரியாத கணவன்
அவளுக்கு நிகர் அவளே
1/4/24
என் இதயம் சொல்கிறது
கண்கள் பேசும் மொழிக் காதல்
என் இயற்கை தாயே
பால்வடியும் உன் அழகு மிக பொலிவுஉடையது, மற்றும் தெளியுடையது,
அதின் அலங்காரா தலைவன் இயற்கைக்கு இனையான இறைவன்,
செல்லும் இடம் மெங்கும் இயற்கை கைகொள்ளா அழகை கொண்டுள்ளது,
அது என்னையும் என் உள்ளத்தையும் காந்தம்போல் இழுகிறது.
இயற்கையே உன் அழகை வர்ணிக்க உலக மொழிகள் எத்தனையோ உள்ளது,
அதை என்னும்போது என் உடல் சிலிர்கின்றது,
என்னென்றால் உன் அழகு வான்போல்,
வர்ணிக்க கடல் போல் வார்த்தைகள் இருபினும் அது போதாது,
ஐம்பூதம் கொண்டார் என்னவோ உன் அழகின் தோற்றம் சிற்பி சிலைவடித்த
கற்கள் உயிர் கொண்டதுபோல் அவ்வளவு கலைஅழகு கொண்டது,
ஆனால் உன் அழகு நிறைந்த செல்வத்தை அனைத்து உயிர்வாழ்களுக்கும்
அம்மா தன் பிள்ளைக்கு தரும் அண்ணம் போல்
அல்லி அல்லி கொத்துவிட்டாய் என் இயற்கை தாயே
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்வில் பிறப்பு ஓர் மகிழ்ச்சியே
வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே
வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே
வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம்
வாழ்வில் தொழில் ஓர் போராட்டம்
வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம்
வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம்
வாழ்வின் சவால்களில் ஓர் போராட்டம்
வாழ்வில் குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம்
வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம்
வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம்
வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம்
வாழ்வே ஓர் போராட்டம்
வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம்
வாழ்க்கை வாழ்வதற்கே
30/3/24
கடந்து வந்த பாதை
இதுவும் கடந்து போகும்
22/3/24
இவள் அழகில்
பெண் ௭ன்பவள் அழகானவள்!!!!
அவள் பிறக்கும் போதே அழகாகிறாள்
அவள் பாதம் இம் மண்ணில் படும் பொழுது
இம் மண்ணையும் அழகு படுதுகிறாள்...
அவள் தவழ்ந்து செல்லும் பொழுது
தங்கமும் தோற்று விடும், அவள் நடந்து செல்லும்
பொழுது நகரமும் வலைவீசும் இவள் அழகில்.....
ஒரு செடியில் இருந்து வரும் ஒரு பூ அழகென்றால்...
ஒரு பெண்ணில் இருந்து வரும்
இன்னொரு பெண்ணும் அழகுதானே....
கண்ணக்குழி
அழகின் நகலாய் பிரம்மன் படைக்க..
நிலவும் வெட்கும் கண்கள் மூடி
கண்ணக்குழி வழியே தவிழும் புன்னகை அழகோ..
எத்தனை கோடி, கருவிழி அழகில் மனமும் மயங்க
கண் அசைவே போதும் கவிதை வரைய..
21/3/24
அழகிய மலையே வா
இயற்கை தந்த அழகிய குழந்தை நீ
மனம் கொள்ளை கொள்ளும் விந்தை நீ,
நீ வந்தால் வளம் பெருகும்
வறுமையும் காணாமல் போகும்
செழுமை தழைத்தோங்கும்
என்றும் வையகம் உனக்கு தலைவணங்கும்
வெள்ளிமழையே வா, அழகிய மலையே வா.
20/3/24
நம் பாசம்
பாலியல்
காலையில் செய்திதாளில் வாசித்த முதல் வார்த்தை பாலியல்!
மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த
வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து
மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க
அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது
பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்
வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால்
ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?
மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்
வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது
கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.
கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.